வைத்தியக் களஞ்சியம் - T. CHANDRASEKHARAN
பாம்புக்கடியால் செத்தவர் பிழைக்க:
வாளவிரை மகிழம்விரை பேப்பீர்க்குவிரைமிளகு வசந்தரசம்தேவதாரம் வகைகேளுசமனாய் கோளவேதேசிப்பழச்சாற்றிலேயூறிக் குளிகைசெய்து நிழலுலர்த்திநீபுத்தில் வாளரவந்தீண்டியேமடிவோர்கள் கண்ணிலிட மாத்திரைகேள்எறுக்கிலையின் சாற்றிலிட நீளமதுகூறுகையாந்தகரைச்சாறும் நிசமிதுவே விடந்தீரும்தீராது போனால் தாளமொழிப்பேசுவோர் சிறுநீரில்கண்ணிலிடுசலவைத் துணியில்நனைத்து அவன்தன்சரீரம்போதிந்து வாலுலகில் மூன்று நாழிகையிலேஎழும்புவான் வல்லயரன்கிருபையால் வருமுயிருதிட்டம் . காளமதுவூதியேயிம்மருந்துசெய்ங்கலங்காதே நான்செய்துகைகண்டதுண்மையே(?)
செத்தவர்களை எழுப்ப:
நோவாளம்,மிளகு,இரதம், மகிழம்வித்து, பேய்ப்பீர்க்கு வித்து, தேவதாரு இவைகளை ஓர் அளவாகக்கொண்டு எலுமிச் சம்பழச்சாற்றில் ஏழுநா றப்போட்டு, அரைத்து உண்டை செய்து உலர்த்திக்கொள்ள; எல்லா நஞ்சுகளுக்கும், உயிர் போகும்படி செய்யும் சன்னி முதலியவைகளுக்கும் ஒரு வுண்டை எருக்கிலைச்சாற்றிலரைத்துக் கையான்தகரைச்சாற் றில் கலக்கி, காதிலிடவும். செத்தவனும் பிழைப்பான்; இல்லை யேல், ஒரு உருண்டையை சிறுநீரிலுரைத்து இரண்டு கண்ணிலு மிட்டு துணியை நீரில்நனைத்து மூன்றுநாழிகை மூடிவைக்கவும். எழுந்திருப்பான் ; இது கைகண்டது. வேறு :-கீரியின்நாக்கு. மயில்நாக்கு, கெருடனநாக்கு இவைகள். மூன்றும் ஒன்றாக உலற்றிஎலுமிச்சம்பழச்சாற்றால் அரைத்து அதனைக் கடைவாயில்தடவ. பாம்பு முதலியவை களின் நஞ்சுபோம்; இது கைகண்டது.
Comments
Post a Comment